புதுடெல்லி: பழைய ஓய்வூதியத்தை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி நாடு முழுவதும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தேசிய கூட்டு போராட்டக் குழு (என்ஜேசிஏ) சார்பில் மாவட்ட அளவிலான பேரணிகள் நடத்த நேற்று திட்டமிடப்பட்டது. இந்நிலையில், அனைத்து ஒன்றிய அரசு துறைகளின் செயலாளர்களுக்கு பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், ‘வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நடத்தை விதிகளின்படி கடுமையான தவறான நடவடிக்கையாகும்.