மக்களவையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா : சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் விசாரணை கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை 2,82,879 விசாரணை கைதிகள் சிறையில் இருந்தனர். 2021ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியன்று இந்த எண்ணிக்கை 4,27,167 ஆக அதிகரித்துள்ளது. இதில் 90,037 பேர் எஸ்சி பிரிவை சேர்ந்தவர்கள், 42,211 பேர் எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள். 1,51,287 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர்கள்.