சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் 60 சவரன் நகைகள் மாயமான விவகாரத்தில், அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி (40) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈஸ்வரியின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து ஈஸ்வரியிடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.