நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையானது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த வழக்கின் கூடுதல் விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.