புதுடெல்லி: ஒன்றிய அரசு சார்பில் சீலிட்ட உறையில் பதில் தாக்கல் செய்த பதிலை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. பாதுகாப்புத்துறையில் ஒரே வேலைக்கு ஒரே பென்சன் வழங்குவது தொடர்பான வழக்கு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஒன்றிய அரசின் பதிலை சீலிட்ட உறையில் தாக்கல் செய்தார். இதை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதுபற்றி நீதிபதிகள் கூறும்போது, ‘உச்ச நீதிமன்றத்தால் பின்பற்றப்படும் இந்த சீல் செய்யப்பட்ட கவர் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம்.