புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு பாக்டீரியா பாதிப்பு இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை தரக்கூடாது என ஒன்றிய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று லேசாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோயாளிகளுக்கு பாக்டீரியா தொற்று இல்லாத பட்சத்தில், லோபினாவிர்-ரிடோனாவிர், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், ஐவர்மெக்டின், மோல்னுபிராவிர், பவிபிராவிர், அசித்ரோமைசின் மற்றும் டாக்ஸிசைக்ளின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது. பிளாஸ்மா தெரபியும் பயன்படுத்தக் கூடாது.