பாஹராம்பூர்: நாடாளுமன்றத்தை முடக்கி ராகுல்காந்தியை ஹீரோவாக்குவதற்கு பாஜ முயற்சிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி வீடியோகான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டு பேசியதாவது: பாஜவை எதிர்த்து போராடுவதில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துவிட்டது. மேற்கு வங்கத்தில் பாஜவுடன் காங்கிரஸ் கட்சிக்கு மறைமுக புரிதல் இருக்கின்றது.