பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் பங்குனி மாத லட்சார்ச்சனை துவங்கியது. பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் உள்ள பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாத 3வது ஞாயிற்றுகிழமையில் முருகனுக்கு பங்குனி மாத சிறப்பு லட்சார்ச்சனைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு மார்ச் மாதம் 3வது வார ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் பங்குனி மாத சிறப்பு லட்சார்ச்சனை நிகழ்ச்சிகள் துவங்கியது. இதை முன்னிட்டு, கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.