ஸ்பா சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் கைது

சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் ஸ்பா ெசன்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.  விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஸ்பா சென்டரில் இரவு நேரங்களில் அதிக எண்ணிக்கையில் வாலிபர்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில், விருகம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் அந்த ஸ்பா ெசன்டருக்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது.

அதைதொடர்ந்து ஸ்பா சென்டர் நடத்திய புது வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்த சாரதா (39) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஸ்பா சென்டரும் முறையான அனுமதி மற்றும் உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், வாட்ஸ் அப் குழு மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இளம்பண்களின் புகைப்படங்களை அனுப்பு பாலியல் தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சாரதாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: