அண்ணாநகர்: திடீர் மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் குறைந்து காணப்பட்டது. கோயம்பேடு பூ மார்க்கெட்டில், கடந்த 14ம் தேதி ஒரு கிலோ ஐஸ் மல்லி, காட்டுமல்லி, மல்லி, ஜாதிமல்லி, முல்லைரூ.300க்கும், கனகாம்பரம்ரூ.400க்கும், அரளி பூரூ.150க்கும், சாமந்திரூ.80க்கும், சம்பங்கிரூ.40க்கும், பன்னீர் ரோஸ்ரூ.70க்கும், சாக்லேட் ரோஸ்ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்துவருவதால், அனைத்து பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லி, காட்டுமல்லி, முல்லை, ஜாதிமல்லி கனகாம்பரம்ரூ.200க்கும், ஐஸ் மல்லிரூ.150க்கும், அரளி பூரூ.50க்கும், சாமந்திரூ.40க்கும், சாக்லெட் ரோஸ்ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது.