தென்காசி: டிஜிபி சைலேந்திர பாபு நேற்று தென்காசியில் அளித்த பேட்டி: போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் திட்டம். தற்போது கஞ்சா வேட்டை 1, 2, 3, 4 என்ற பெயரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 750 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.