சென்னை: தமிழ்நாடு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட, எழுதப்படிக்க தெரியாத வயது வந்தோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் வகையில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 5 லட்சத்து 28 ஆயிரம் எழுத்தறிவற்றவர் கள் கல்வி கற்று வருகின்றனர். அதற்காக 28 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள அனைவருக்கும் 19ம் தேதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்க அறிவிக்கப்பட்டது.