சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கலைஞர் அளித்த ரூ.5 கோடியில் கிடைக்கும் வட்டியில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ரூ.5 கோடியில் 1 கோடியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு 2007ல் வழங்கினார். மீதமுள்ள ரூ.4 கோடியில் கிடைக்கும் வட்டியில் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.5 கோடியே 69 லட்சத்து 90 ஆயிரம் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
