கும்பகோணம்: கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரை காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர் குணசேகரன் (60). இவரது மனைவி சுமதி (57). இவர் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் ஊராட்சி மன்ற தலைவராக சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இவரது கணவர் குணசேகரனுக்கும் இவருக்கும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனமுடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சுமதி நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை வீட்டில் இருந்த மண்எண்ணையை தனக்கு தானே ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டு வீட்டின் ரூம் கதவை மூடிவிட்டார். அவர் அலறும் சத்தம் கேட்டு கணவர் குணசேகரன் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு போராடிய மனைவி சுமதியை காப்பாற்ற முயன்றார்.