புதுடெல்லி: ‘உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் குறித்த சவால்களை சமாளிக்க சிறுதானியங்கள் நமக்கு உதவும்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்மொழிவைத் தொடர்ந்து, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐநா அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் உலகளாவிய சிறுதானிய மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியாவின் முன்மொழிவு மற்றும் முயற்சிகளால் ஐநா சபை 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது, நாட்டிற்கு மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். சிறுதானியத்தை உலகளாவிய இயக்கமாக மேம்படுத்த இந்தியா தொடர்ந்து செயல்படும்.