புதுடெல்லி: இந்தியாவின் ஜனநாயகம். அதன் அமைப்புகளின் வெற்றி சிலரைத் துன்புறுத்துகிறது. அதனால்தான் அவர்கள் நமது நாட்டை மோசமாக காட்ட முயற்சி செய்கிறார்கள் என்று ராகுல்காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சனம் செய்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது; நாடு முழுவதும் நம்பிக்கையும் உறுதியும் நிறைந்து, உலக அறிவுஜீவிகள் இந்தியாவைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கும்போது, அவநம்பிக்கையைப் பேசுவது, நாட்டை மோசமான நிலையில் காட்டுவது, நாட்டின் மன உறுதியைக் குலைப்பது போன்றவையும் நடைபெறுகின்றன. இந்தியா மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தாலும், நாடு தனது இலக்குகளை அடையும் வகையில் தொடர்ந்து முன்னேறும்.