தண்டையார்பேட்டை: மண்ணடி தம்புசெட்டி தெருவை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதே தெருவில் உள்ள தனக்கு சொந்தமான 2,652 சதுரஅடி இடத்தில் இருந்த கட்டிடத்தை, கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலுக்கு எழுதி வைத்தார். சாமுண்டீஸ்வரி அறக்கட்டளை என்ற பெயரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பகுதி மக்கள் பயன்படும் வகையில் அந்த கட்டிடம் மருத்துவமனையாக செயல்பட்டது. இதனை மனிஷ் பி.ஷா என்பவர் ஆக்கிரமிப்பு செய்து 12 நபர்களுக்கு உள்வாடகை விட்டு வந்தார். அதில் ஹார்டுவேர்ஸ், வழக்கறிஞர்கள் அலுவலகம் என 12 கடைகள் செயல்பட்டு வந்தன. இதுகுறித்து அறநிலையத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டு, இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது.