கொல்கத்தா: சமாஜ்வாடி கட்சி 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று கொல்கத்தாவில் துவங்கியது. இதுகுறித்து சமாஜ்வாடி கட்சியின் துணை தலைவரும் முன்னாள் அமைச்சருமான கிரண்மோய்நந்தா கூறுகையில்,‘‘ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் 11 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தாவில் நடக்கிறது. 2 நாள் கூட்டத்தில் இந்தாண்டு நடக்கும் சட்டீஸ்கர்,ராஜஸ்தான்,மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலுக்கான உத்திகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது’’ என்றார்.