எழுத்தாளர் மங்கள முருகேசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: எழுத்தாளர் மங்கள முருகேசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பெரியாரிய சிந்தனையாளர், திராவிட இயக்கத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் மங்கள முருகேசன். சுயமரியாதை சிந்தனை மிளிரும் ஏராளமான நூல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்தவர் மங்கள முருகேசன். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் அவர்களது கொள்கைகளை எந்நாளும் பிரதிபலித்தவர் மங்கள முருகேசன் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: