திருவொற்றியூர்: எண்ணூர் தாழங்குப்பம், உலக நாதபுரம் 6 வது தெருவில் மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஜாக்கர்கன்ட் மாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் சுமார் 10அடி ஆழம் பள்ளம் தோண்டி ஏற்கனவே போடப்பட்டிருந்த மழைநீர் கால்வாயை பொக்லைன் இந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பக்கவாட்டில் இருந்த 10 அடி உயரம் 20 அடி அகலமுள்ள மழைநீர் கால்வாய் திடீரென பள்ளத்தில் சரிந்து விழுந்தது. இதில் உள்ளே இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் (26) அம்ரேஷ் குமார் (23) ஆகிய இருவரும் சிக்கிக் கொண்டனர்.