டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 5 நாள் அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று மேலும் 5 நாட்கள் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி மதுக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் 7 நாள் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்ததால், அவரை மேலும் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்க இயக்குனரகம் டெல்லி நீதிமன்றத்தில் கோரி மனு தாக்கல் செய்தது.