சென்னை: மார்ச் 20-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை மைய தென்மண்டல் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்தது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலச்சந்திரன், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் இருந்து மத்தியப்பிரதேசம் வரை மேல் திசை கீழ் திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு நிகழ்கிறது. தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.