மனித வெடிகுண்டாக மாறுவேன் என பொதுவெளியில் பேசிய முன்னாள் அமைச்சர் உதயக்குமாரை கைது செய்ய வலியுறுத்தி திருப்பூர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

திருப்பூர்: மனித வெடிகுண்டாக மாறுவேன் என பொதுவெளியில் பேசிய  முன்னாள் அமைச்சர் RB.உதயக்குமாரை எம், எல்,ஏவை  தமிழக காவல்துறை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் ஒன்றிய அரசு NIA புலன் விசாரணையை துவக்கிட கோரிக்கை வைத்து அஇஅதிமுக திருப்பூர் மாநகர மாவட்ட கழக நிர்வாகிகள் இருவர் சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள வால்போஸ்டர்களால் பரபரப்பு நிலவியுள்ளது.

கடந்த சில நாட்களாக முன்பு சிவகங்கையில்  நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்திற்கு செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விமானநிலைய பேருந்தில் அமமுகவை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் முழக்கமிட்டார்.

துரோகத்தின் அடையாளம். சின்னம்மாவிற்கு துரோகம் பண்ணியவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர். எனக் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினார் ராஜேஸ்வரன். அதை பேஸ்புக்கில் அவர் லைவ் செய்வதை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் செல்போனை வேகமாக பறித்தார். உடனே அதிமுகவினர் பேருந்தில் இருந்து ராஜேஸ்வரனை கீழே இறக்கி தாக்கி விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.

ராஜேஸ்வரன் மீது விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ராஜேஸ்வரனை தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் சென்ற அதிமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை  கண்டித்து கடந்த  13ம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார், அ.தி.மு.க.,வினர் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என்றார். இதுதொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசில் சம்மட்டிபுரம் தி.மு.க., பகுதி செயலாளர் தவமணி புகார் அளித்துள்ளார்.

அதில், தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை துாண்டும் விதமாக பேசியுள்ளார். சட்டவிரோதமாக வெடிகுண்டு கலாசாரத்தை துாண்டும் விதமாக பேசிய உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு திருப்பூர் மாநகரத்தின் ரயில் நிலையம், பேருந்து நிலையம், புஷ்பா தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் சார்பில்  முன்னாள் அமைச்சர் r.p. உதயகுமாரை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் போஸ்டர்கள் ஒட்டப்படுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனித வெடிகுண்டாக மாறுவேன் என பொதுவெளியில் பேசிய  முன்னாள் அமைச்சர் RB.உதயக்குமாரை தமிழக காவல்துறை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், மத்திய அரசு NIA புலன் விசாரணையை துவக்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.

Related Stories: