மதுரை: மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியுள்ள நிலையில், அவரை விமர்சிக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டும் திட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் அணி கையில் எடுத்துள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.