அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 விமானிகள் பலி

இடாநகர்: அருணாச்சலப்பிரதேசத்தில் 2 விமானிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். அருணாசலப்பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் லெப்டினன்ட் மற்றும் மேஜர் ஆகியோருடன் சங்கே கிராமத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு புறப்பட்டு அசாமின் சோனிப்பூர் மாவட்டத்தில் மிசாமாரி நோக்கி சென்றது. காலை 9.15மணிக்கு விமானிகள் உடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு கமேங் மாவட்டத்தில் உள்ள மண்டாலா அருகே போம்டிலாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதை பார்த்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். விபத்து நடந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புபணிகள் மேற்கொள்ளப்பட்டது. விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள் இருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்தில் இறந்த விமானிகள் லெப்டினன்ட் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related Stories: