புதுடெல்லி: சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களை இணைத்து அமைக்கப்பட்டுவரும் புதிய ஒருங்கிணைந்த முனையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் எழுப்பிய கேள்விகள் வருமாறு :
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களை மேம்படுத்தவும் அதனை முறையாகப் பராமரிக்கவும் அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களை இணைத்து அமைக்கப்பட்டுவரும் புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் கட்டிடத்தில் அமல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் என்ன?