வேளச்சேரி: பெரும்பாக்கம், எழில் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பூமிகா அறக்கட்டளையினர் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 16 வகுப்பறைகள், நூலகம், கணிணி அறை, ஆய்வகம், தலைமை ஆசிரியர் அறை, தளவாடப் பொருட்கள் இருப்பு அறை, மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கழிவறைகள், 25 டேபிள்கள் மற்றும் நாற்காலிகள், 40 இணை டேபிள் மற்றும் நாற்காலிகள், 75 மின்விசிறிகள், 100 மின்விளக்குகள், குடிநீர் வசதி, திறந்த நிலை கலையரங்கம் ஆகிய அனைத்து வசதிகளுடன் கட்டிக் கொடுத்துள்ளனர்.