அரசு துறைகளில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்: பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அறிவிப்பு

சென்னை: அரசு துறைகளில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் கூறினார். இதுகுறித்து பொதுப்பணித்துறையின் அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் கோட்டப் பொறியாளர்களுக்கு தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் : முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டமான தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு இளைஞர்களைக் கொண்டு நிரப்புதல் தொடர்பாக மேற்படி முதன்மை இயக்குநர் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. அதன்படி விவரங்களை வட்ட அலுவலகம் மற்றும் வட்ட கட்டுப்பாட்டில் உள்ள அலுவலங்களிடமிருந்து பெற்று அதனை ஒருங்கிணைத்து படிவத்தை அலுவலக பணியாளர்களுக்கு அனுப்ப வேண்டும். தனியாகவும், திறன்மிகு உதவியாளர்கள் மற்றும் சாலைப் பணியாளர்களுக்கு தனியாகவும் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: