இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 1.50 லட்சம் பேர் பயனடைந்தனர்: முதல்வர் நெகிழ்ச்சி

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: சொன்னதைச் செய்வது மட்டுமல்ல; சொல்லாமலும் செய்வோம். செய்கிறோம்! தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. ஆனால் Golden Hours காலக்கட்டத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென, கடந்த 18-12-2021 அன்று  இன்னுயிர் காப்போம் திட்டத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் தொடங்கி வைத்தேன். இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் உருவான இந்த திட்டம், ஒரு முன்மாதிரி திட்டம். இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000வது நபராக பனிமலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயனடைந்திருக்கிறார். ஒன்றரை லட்சம் பேர் அல்ல; அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்டுள்ளன என்ற நெகிழ்வோடு இதனை பகிர்கிறேன்.

Related Stories: