கலபுர்கி: குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். கலபுர்கி மாவட்டம், சித்தாப்பூர் தாலுகாவில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் காப்பீடு பணத்தை திரும்ப வழங்க வேண்டும். 2 மாத நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகம் முன்பு, மாநில அங்கன்வாடி பணியாளர் சங்க தாலுகா சமிதியினர் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். அப்போது, ஆயுள் பாதுகாப்புக்காக செய்யப்பட்ட காப்பீடு பிரீமியம் 2 வருடங்களில் இருந்து சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. ஓரளவு பணம் மட்டுமே டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் பணம் டெபாசிட் செய்யவில்லை. விசாரணைக்கு பின், பிடித்தம் செய்யப்பட்ட தொகை முழுவதையும் அங்கன்வாடி பணியாளர்கள் கணக்கில் செலுத்த வேண்டும்.