பெங்களூரு: பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மாநில கல்வி இயக்குனரகம் சார்பில் சிறப்பு உதவி மையம் திறக்கப்படுகிறது. இது குறித்து கர்நாடக மாநில உயர்நிலை பள்ளி தேர்வு வாரிய இயக்குனர் எச்.என்.கோபாலகிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கல்வி இயக்குனரகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஆலோசனை மற்றும் உதவி மையம் வரும் 20ம் தேதி முதல் திறக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் 080-23310075 மற்றும் 080-23310076 ஆகிய எண்களில் தினமும் பகல் 3 மணி முதல் மாலை 7.30 மணி வரை வரும் 28ம் தேதி வரை தொடர்பு கொண்டு பேசலாம். மேலும் வரும் 26ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையம் செயல்படும்.