டெல்லி: சிவசேனா கட்சியை ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 34 எம்எல்ஏக்கள் அப்போது முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பினார்கள். இதனால் அப்போதைய கவர்னர் கோஷியாரி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து உத்தவ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே நியமிக்கப்பட்டார்.