சென்னை: ஈரோடு அருகே மாட்டு இறைச்சி கடைகள் இடிக்கப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வாரச் சந்தையில் இருந்த 13 மாட்டு இறைச்சி கடைகள் இடிக்கப்பட்டுள்ளது. திடீரென்று எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நகராட்சி நிர்வாகம் இடித்து விட்டது. கடை நடத்தியவர்கள் தொடர்ச்சியாக நிர்வாகத்தை அணுகி மீண்டும் தொழில் செய்ய அனுமதி கோரி வருகின்றனர்.