சென்னை: விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க சட்ட விரோதமாக மின்வேலிகள் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று, ஆனைமலை மற்றும் முதுமலை யானை காப்பகங்களில் பனியாற்றும் 10 யானை பராமரிப்பாளர்களுக்கு தலா 1 லட்ச ரூபாய்கான காசோலையை வழங்கும் அடையளமாக 10 பேருக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். இந்நிகழ்வில் வனத்துறை தலைமை செயலர் சுப்ரியா சாகு, வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி மற்றும் வனத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.