சென்னை: பாஜ தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவராக இருந்த நிர்மல்குமார், மாநில செயலாளர் திலீப்கண்ணன் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனால், எடப்பாடியை கண்டித்து பாஜவினர் போராட்டம் நடத்தி அவரது உருவபடத்தை எரித்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.