முதல்வர் பிறந்த நாள் பொது கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் திமுக சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் தமிழ்நாடு முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதூர் பேரூர் செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். அவைத்தலைவர் கோகனன், ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, மாவட்ட கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பால்ராஜ், ஒன்றிய நிர்வாகிகள் சுபரஞ்சனி கன்னியப்பன், பரமசிவன், நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட குழு தலைவர் மனோகரன், தலைமை கழக பேச்சாளர்கள் சைதை சாதிக், அரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டு, ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில், மாவட்ட துணை அமைப் பாளர்கள் செந்தில்தேவராஜ், பொடவூர் ரவி, குண்ணம் முருகன், ஜார்ஜ், சந்தவேலூர் சத்யா, ஒன்றியக்குழு துணை தலைவர் மாலதி போஸ்கோ, ஒன்றிய அமைப்பாளர்கள் மண்ணூர் சரவணன், தணிகாசலம், ஆதித்யா முருகன், தண்டலம் மனோஜ், கிளாய் மோகன்ஜி, ஊராட்சி தலைவர்கள் எறையூர் சசிரேகா சரவணன், கீவளூர் பழனி, பண்ருட்டி அர்ஜுனன், சோகண்டி பூரணி பால்ராஜ், பொடவூர் ஜீவா ரவி, சந்தவேலூர் வேண்டாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: