அசாமில் 10ம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் கசிவு

கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில், 10ம் வகுப்பு பொதுதேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம்  நடைபெற இருந்த பொதுஅறிவியல் தேர்வின் வினாத்தாள் வௌியானதால், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிஐடியிடம் விசாரணையை ஒப்படைத்தனர். இதையடுத்து, விசாரணையை தொடங்கிய சிஐடி, கவுஹாத்தி, வடக்கு லக்கிம்பூர், தேமாஜி, சதியா, திப்ரூகர் மற்றும் தின்சுகியா பகுதிகளை சேர்ந்த ஆசிரியர், மாணவர்கள் உள்பட 22 பேரை கைது செய்துள்ளதாக அசாம் காவல்துறை இயக்குநர் ஞானேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories: