கிரேட் 2 மருத்துவ ஆய்வக நுட்புநர்கள் எம்ஆர்பி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்

சென்னை: கிரேட் 2 மருத்துவ ஆய்வக நுட்புநர்களை எம்ஆர்பி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் மற்றும் இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சியை நிறைவு செய்த மருத்துவ ஆய்வக நுட்புநர்கள் நலச் சங்கத்தினர் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவ ஆய்வக நுட்புநர் 2ம் நிலைக்கான காலிப்பணியிடங்களை, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் இட ஒதுக்கீடு மற்றும் காலமுறை ஊதியம் ஆகியவற்றோடு விரைந்து நிரப்ப வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டாண்டு பயிற்சிக் கால உதவி ஊக்கத் தொகையும் வழங்கிட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று உண்ணாநிலை அறப்போராட்டத்தை 10 மணி முதல் 4 மணிவரை எழும்பூரில் நடத்தப்படும். 

Related Stories: