டெல்லி: ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபாவில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், இரு அவைகளிலும் நேற்று தொடர் அமளி நிலவியதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல்காந்தி பேசியதற்காக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஆளும் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் எதிர்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் நேற்று முதல் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.