சென்னை: சென்னை அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணைகளில் இருந்து சரியான நேரத்தில் பால் விநியோகம் செய்யப்பட்டது. சோழிங்கநல்லூரில் இயங்கும் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று அதிகாலையில் உரிய நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பால் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பால் பண்ணையில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக வாகனங்கள் புறப்பட்டு சென்றன.