ஆவடியில் 23ம் தேதி பழைய வாகனங்கள் ஏலம்

ஆவடி: ஆவடியில் வரும் 23ம் தேதி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2ம் அணியில் பழைய வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2ம் அணியில் பழைய மோட்டார் வாகனப் பிரிவு ஆய்வாளர் அந்தோணி ஜான்சன் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2ம் அணி உள்ளது. இங்குள்ள 11 கனரக வாகனம், 4 இலகுரக வாகனம் உள்ளிட்ட பழைய வாகனங்கள் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.

வாகனங்களை வாங்க விரும்புவோர் காலை 7 மணிக்கு வந்து நுழைவு கட்டணமாக ரூ 1000 செலுத்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏலத்தொகையுடன் விற்பனை வரியையும் கூடுதலாக செலுத்த வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: