சென்னை: பாரத மக்கள் கட்சி தலைவர் பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே பட்டினச்சேரி கடற்கரையில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுச்சூழல் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடல்சார் உட்பட அனைத்து உயிரினங்களுக்கு பாதிப்புக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. மேலும் அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் இந்த கச்சா எண்ணெய் கசிவு காரணமாக மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே கசிவு ஏற்பட்ட
நிலையில் சிபிசிஎல் நிறுவனத்தின் மெத்தன போக்கால் மீண்டும் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மட்டுமல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு காசிமேடு எண்ணூர் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கசிவால் மீனவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்தன.