திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மாதா சிலையில் பாதுகாப்பு கூண்டு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூண்டி பேருந்து நிலையத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு 6 அடி உயரம் கொண்ட பூண்டி மாதா சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை சுற்றி பாதுகாப்புக்கு கண்ணாடியிலான கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சென்று தினமும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று காலை பக்தர்கள் வந்தபோது மாதா சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு சுக்குநூறாக உடைக்கப்பட்டு கிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியில் பக்தர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவல்படி, ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா மற்றும் போலீசார் விரைந்துவந்து ஆய்வு செய்தனர்.