திருவள்ளூர்: திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் இ.இன்பநாதன், ஆர்.விஜயலட்சுமி ராமமூர்த்தி, பி.வெங்கடரமணா, பி.என்.உதயகுமார், எம்.நரேஷ்குமார், ஆர்.டி.இ.சந்திரசேகர், வலசை இரா.சந்திரசேகர், சிற்றம் ஜெ.சீனிவாசன், நகர, ஒன்றிய செயலாளர்கள் ஜி.கந்தசாமி, சூரகாபுரம் கே.சுதாகர், எஸ்.மாதவன், என்.சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர் வி.ஆர்.ராம்குமார், கே.பி.எம்.எழிலரசன், வினோத்குமார் ஜெயின், ஆர்.ராஜி, என்.ராதாகிருஷ்ணன், வெங்கத்தூர் ஊராட்சி செயலாளர் எஸ்.ஞானகுமார், பாப்பரம்பாக்கம் வரதராஜன், போளிவாக்கம் மணி, எம்.துக்காராம், தாரா வெங்கடேசன், எம்.ஜோதி, ஏ.செல்வம், பாலாஜி வரவேற்றனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், 500 பெண்களுக்கு சேலைகள் வழங்கினார்.
மூத்தோர் தடகள வீரர் சாமுவேல் என்பவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியதற்கு பாராட்டிபேசினார். நகர இளைஞர் அணி செயலாளர் எஸ்.வேல்முருகன் நன்றி கூறினார். பாமக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 500 பேர் விலகி முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.