மடகாஸ்கர் அருகே மயோட் ஆற்றுப்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 22 அகதிகள் பலி: 23 பேர் மீட்பு

மடகாஸ்கர்: மடகாஸ்கர் அருகே மயோட் ஆற்றுப்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 22 அகதிகள் உயிரிழந்தனர். மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் தீவான மயோட்டுக்கு செல்லும் வழியில் படகு கவிழ்ந்து 22 அகதிகள் உயிரிழந்தனர். 47 பேரை ஏற்றிச் சென்ற படகு மடகாஸ்கரின் வடக்கே அங்கொம்பொரோன கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை (11.03.2023) இரவு 1 மணியளவில் அம்பிலோப், அங்கொம்பொரோனாவில் மீனவர்கள் குழுவினர்  படகு விபத்தில் உயிர் பிழைத்த பலரை கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் பொதுமக்களும், காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் 23 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 22 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும் படகு விபத்தில் காணாமல் போன 2 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: