ஸ்ரீநகர்: மத்திய காஷ்மீரின் சோய்புக் பகுதியை சேர்ந்த தன்வீர் அகமத் கான் என்பவர், பயிற்சி வகுப்புக்கு சென்ற தன் 30 வயது சகோதரியை காணவில்லை என சோய்புக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மொகந்த்பொரா புட்காம் பகுதியை சேர்ந்த ஷபீர் அகமது வானி(45) உள்ளிட்ட சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர்.