திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 19ம் தேதி வரை நடை திறந்திருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகள் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையொட்டி கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படும். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 15ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், 25 கலசாபிஷேகம், களபாபிஷேகம், உதயாஸ்மய பூஜை, புஷ்பாபிஷேகம் மற்றும் படிபூஜை ஆகியவை நடைபெறும்.