சென்னை: மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை குறித்த 2 நாள் கருத்தரங்கம் தொடங்கியது. சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இண்டர்நேஷனல் மருத்துவமனையும், இந்திய சொசைட்டி ஆப் நியூக்கிளியர் மெடிசன் அமைப்பும் இணைந்து, ‘மாஸ்டர் கிளாஸ் இன் தொரனோஸ்டிக்ஸ்’ எனும் புற்றுநோய் தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் மருத்துவமனை அரங்கத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மியாட் மருத்துவமனயின் நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: புற்றுநோய் ஏற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறும்போது, முடி உதிர்தல், வயிற்றுப் போக்கு, உடல்சோர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்திக்கும் நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சையே வேண்டாம் என ஓடும் நிலையை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். மருத்துவர்கள் நோயாளிகளின் மனநிலைப்படி வைத்தியம் பார்க்கும்நிலை வர வேண்டும். புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய தீர்வாக, நியூக்கிளியர் மெடிசனான ஐசோடோப் கொடுத்து பக்க விளைவுகள் எதுவும் இல்லாத வைத்தியம் பார்க்க முடியும். இந்த ஐசோடோப்பை வாய் மூலமாகவும் சாப்பிடலாம். சிரிஞ்சு மூலமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.