சென்னை: அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக் கொல்லிகளுக்கு அரசு நிரந்தரத்தடை விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே 60 நாட்களுக்கு தற்காலிகத் தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்தது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
