அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மீது அதிமுக எம்.பி.சி.வி.சண்முகம் புகார்!

சென்னை : நேர்காணல்களில் அரசியல் கட்சியினரின் சாதியை குறிப்பிட்டு பேசும், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டிவனம் அடுத்த ரோசனை காவல் நிலையத்தில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார். சாதியை குறிப்பிட்டு பேசி, இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டுகிறார் ரவீந்திரன் துரைசாமி என்றும் நான் சொல்லாத விஷயத்தை சொன்னதாக கூறி அவதூறு பரப்பி வருகிறார் என்றும் சி.வி.சண்முகம் சாடி உள்ளார்.

Related Stories: